Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இரா.புதுப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் பண்டிகை எருது விடும் நிகழ்ச்சி

நவம்பர் 11, 2023 09:43

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த இரா.புதுப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் பண்டிகை நடைபெற்று வருகிறது. மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி மற்றும் தேர் பவனி நடைபெற்றது. 

அதன் தொடர்ச்சியாக  எருது விடும் நிகழ்வு நடைபெற்றது. விவசாயிகள் தாங்கள் வளர்த்த எருது மாடுகளை கொண்டு வந்து மாரியம்மன் கோவில் முன் உள்ள திடலில் இருந்து விடும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த எருது விடும் நிகழ்வுக்கு யாதவர் வீட்டிலிருந்து வடம் எடுத்துச் செல்லப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்த எருது விடும் நிகழ்வானது  களைகட்டும்.

தலைப்புச்செய்திகள்